பால் கொடுக்கும் பெண்களுக்கான உணவு (Breast feeding mothers food)

குழந்தை பெற்ற பெண்களின் உணவைப் (Breast feeding mothers food) பொறுத்துத்தான் தாய்ப்பாலில் உள்ள சத்துகள் தரமானதாக அமையும். தாயின் உணவு குறைந்தால், பால் சுரப்பதற்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே பாலுட்டும் தாய்மார்கள் தன்னுடைய உணவில் அதிக அக்கறை எடுத்து கொள்ளவேண்டும்.

முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தையின் வளர்ச்சி தாய்ப்பாலை மட்டுமே நம்பி இருப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்க வேண்டியது முக்கியம்.

அத்துடன் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பால் முலமே கிடைக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தமது உணவில் (Breast feeding mothers food) மிகுந்த கவனம் கொள்ளவேண்டும்.

எனவே, தனக்குத் தேவையான உணவை நேரத்தோடு சாப்பிடுவதும், குழந்தை பசித்து அழும்போதெல்லாம் தாய்ப்பால்  கொடுப்பதும் அவசியம்.

 

பிறந்த குழந்தை தாயின் உடலிலிருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ளும் வேளையில், புதுச்சூழலில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய்ப்பாலில் இருந்து பெறப்படும் பிறபொருளெதிரி உதவும்.

இந்த பிறபொருளெதிரிகள் பல நுண்ணுயிர்களைத் தாக்கி அழித்து ,பல தொற்றுநோய்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும்.

பாலூட்டும் தாய் தினமும் உண்ண வேண்டியவை

பாலூட்டும் தாயானவள் (Breast feeding mothers food) தினமும் தேவையான அளவுக்குக் காய்கறிகளும் பழங்களும் கலந்த சரிவிகித உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதும், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

குழந்தையின் உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தினமும் குறைந்தது 2 டம்ளர் பாலும், 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.
Breast feeding mothers food,annaimadi.com,fruits & vegetables,milk products,spinache, increasing mother milk
பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள், உலர்பழங்களைச் சாப்பிடலாம். மீன், முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச்  சாப்பிடலாம்.
 
உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது கார்போஹைட்ரேட்கள் தான். இவை தானிய உணவுகளில் அதிகம் உள்ளன.கோதுமை, கேழ்வரகு, தினை, சாமை, அவல், ஓட்ஸ், எள் போன்ற தானியங்களால் செய்யும்  உணவுகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை சாப்பிடுவதால் அவ்வளவாக கலோரிகள் அதிகரிக்காது.
 
தினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. காய்கறிகளைத் தேர்வு செய்யும்போது தினமும் ஒவ்வொரு வண்ணம் உள்ள காயாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
கரட், பீட்ரூட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீர்க்கை, பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு என வண்ண வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் தாயின் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தரக்கூடியது.
 
மேலும் காய்கறிகளையும் பழங்களையும் தேவையான அளவுக்குச் சாப்பிடும்போது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், அயோடின்,  துத்தநாகம் போன்ற தாதுக்களும் கிடைத்துவிடும்.
உணவில் சோயா, சுண்டைக்காய், நூல்கோல், கொத்தமல்லி, வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நல்லது.
 
பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடலாம். பாலில் பூண்டு கலந்து அருந்தலாம் அல்லது பூண்டு சாதம்  செய்தும் . தாய்ப்பால் சிறப்பதற்கு பூண்டு மிக நல்லது. தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் பாதுகாக்கப்பட்ட  சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள், அதிகமான மசால் பொடி சேர்க்கப்பட்ட உணவு வகைகள் ,அளவுக்கதிகமான நெய் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *