சுக்கு மல்லி கோப்பி (Coffee for good digestion)
மழை, குளிர் காலங்களில் ஏற்படும் சளி, தடிமன், இருமல், தொண்டை நோ என்பவற்றால் நாம் பெரிதும் அவதிப்படுவோம்.பாட்டிமார் சுக்கு மல்லி கோப்பி (Coffee for good digestion) குடிக்க சொல்வார்கள்.
சுக்குமல்லி கோப்பி வீட்டிலேயே இலகுவாக இயற்கைபொருட்களைக் கொண்டு செய்வது எப்படி என பார்ப்போம்.
மற்றும் இந்த கோப்பி சோர்வு , அஜீரணம், தலைவலிக்கு உடனடி தீர்வு தரும்.
சுக்கு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம்.
விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறு துண்டுகளாகவோ அல்லது சுக்குதூளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி ஆகியவற்றில் ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு மல்லி காபி.
சுக்கு மல்லி காபி குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
- வாயுத்தொல்லை இல்லாமல் போகும்.
- அஜீரணத்தைப் போக்கும்.
- வலி அகற்றி, மாந்தம் போக்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும்.
- ளியைக் குணப்படுத்தும்.
- மூட்டுவலியை மொத்தமாய்விரட்டும்.
- வாதம்,பித்தம் அகற்றும்.