பேதிமருந்து சாப்பிடும் முறை (Diarrhea medicine)

நோய் நாடி நோய் முதல் நாடி வள்ளுவரின் கூற்றுப்படி இந்த பேதி மருந்து (Diarrhea medicine) நோயின் முதல் நாடியாக அதாவது நோய்க்கான முதல் காரணியாக செயற்பட்டு நோயைத் தீர்க்கின்றது.

உடலில் தங்கும் கழிவுகள்,குடலில் உள்ள நாட்பட்ட கழிவுகள்,விசத்தன்மைகள் போன்றவற்றை அகற்ற சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டதே  இந்த பேதிமருந்து (Diarrhea medicine) சாப்பிடும் முறை.

உடலைச் சுத்தப்படுத்தவே பேதிமருந்து எடுக்கப்படுகின்றது. உயிர் வளியேற்றம் என்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அயனிகளை உருவாக்கும் ஒரு வேதியல் செயற்பாடு.

பேதி மருந்து  (Diarrhea medicine) இந்த உயிர் வளியேற்றத்தை தடுக்கின்றது அல்லது தாமதப்படுத்துகின்றது. இயல்பாகவே இந்த செயற்பாடு நாம் சாப்பிடும் ஊட்டசத்து நிறைந்த உணவுகளால் தடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.

ஆனால் சில நோய்களாலும், நாம் உண்ணும் தவறான உணவுகளாலும் இந்த தீய அயனிகள் உருவாக்கம் அதிகப்படுத்தப்பட்டு உடலில் அவை தொடர் நோய்த்தாக்கங்களை உருவாகுகின்றது.

அதாவது மூட்டுவாதம்,பக்க வாதம்,புற்றுநோய்,அல்சைமர், நரம்பு சிதைவு நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படக் காரணமாகின்றது.

இவை வராமல் தடுக்க சித்தர்காளால் உருவாக்கப்பட்டதே நோய் அணுகா விதிமுறையே இந்த பேதி மருத்துவமுறை.

அதோடு பேதி மருத்துவம் சில சவாலான நோய்களையும் வயோதிபத்தையும் உண்டாக்கும் வேதியல் செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு இளமையையும் காக்குமாம்.

பேதி மருந்து 1 – கடுக்காய் (Diarrhea medicine) 

Diarrhea medicine,Diarrhea medicine for adults,Diarrhea medicine for kids,Diarrhea medicine best,Diarrhea medicine,பேதி மருந்து சாப்பிடும் முறை,annaimadi.com,பேதி மருந்து

பேதி மருந்து சாப்பிட்டால் ,காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும். சிலருக்கு வாந்தி, வியர்வை கூட வரும். மாலை வரை களைப்பு இருக்கும் எனவே முழுமையாக ஓய்வு கிடைக்கும் நாளை இதற்கு தெரிவு செய்ய வேண்டும் .

இதற்கு முதல் நாள் எண்ணெய்க்குளியல் செய்தால் மிகவும் நல்லது. எண்ணெய்க்குளியல் செய்த நாளில் இலகுவாக செரிமானம் ஆகக் கூடிய  உணவுகளை உண்ண வேண்டும்.

காலையிலேயே பேதிக்கான மருந்தை எடுக்க வேண்டும்.

பேதி மருந்து 2 – ஆமணக்கு எண்ணெய்

Diarrhea medicine,Diarrhea medicine for adults,Diarrhea medicine for kids,Diarrhea medicine best,Diarrhea medicine,பேதி மருந்து சாப்பிடும் முறை,annaimadi.com,பேதி மருந்து

அதிகமாக வேலை செய்த மறுநாளோ,தொலை தூரப் பயனத்தின் பின்போ,இரவு கண் விழித்த பின்னரோ பேதிக்கான மருந்தை பாவிக்கக்கூடாது.

ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது. இது உடலில் உள்ள கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றி, பசியை தூண்டி உடலுக்கு நன்மை அளிக்கின்றது.
 
50 மி.லி. ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெயை) 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து.
6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் அகற்றப்பட்டு , ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நமது முன்னோர்கள் செய்து வந்த இந்த பேதி மருதத்துவத்தை பாவித்து நாம் உடம்பினை நோயில்லாமல் பாதுகாப்போம்.

பேதிக்கு மாத்திரை போடுவது போன்றவை இல்லாமல் இயற்கை முறையில் உணவுகள் மூலமே குடலை சுத்தம் செய்தால் எந்த விதமான பக்க விளைவுகளும் உண்டாகாமல் தவிர்க்க முடியும்.

Diarrhea medicine,Diarrhea medicine for adults,Diarrhea medicine for kids,Diarrhea medicine best,Diarrhea medicine,பேதி மருந்து சாப்பிடும் முறை,annaimadi.com,பேதி மருந்து

இஞ்சி சாறு ,வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. சீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.
இஞ்சியின் தோல் நீக்கி  அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகி விடும். 
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இதை எடுக்க வேண்டாம். லெமன் ஜூஸில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. இது  குடலை வேகமாக சுத்தமாக்குகிறது. இதை லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள். மலச்சிக்கலை போக்கும். 
 
கற்றாழை ஒரு நச்சுக்களை வெளியேற்றும் பொருளாகவும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து  அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை எடுத்து வாருங்கள். இது மலச்சிக்கல், சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும்  இரைப்பைக் வலி போன்றவற்றை போக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *