ஸ்ரீ கிருஷ்ண (God Krishna) அவதாரம், திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான மற்றும் அனைவரும் விரும்பும் ஒரு அவதாரம் ஆகும்.
பூமியின் பாரத்தை குறைக்கவும், அதர்மத்தை அழிக்கவும் கிருஷ்ண அவதாரமெடுத்த விஷ்ணு குருஷேத்திர போரின் மூலம் தனது குறிக்கோளை அடைந்தார்.
குருஷேத்திர போரால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இதற்காக கிருஷ்ணர் இழந்ததும் எண்ணற்றவை.
தனது குறிக்கோளை அடைவதற்காக கிருஷ்ணர் பல தந்திரங்களை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பலரின் சாபங்களுக்கு அவர் ஆளானார்.
இறுதியில் அனைத்து சாபங்களின் விளைவாக மரணமும் அடைந்தார். கிருஷ்ணரின் மரணம் பூமியில் வாழ்ந்தவர்களை வெகுவாக பாதித்தது. குறிப்பாக பாண்டவர்களை பெரிதும் பாதித்தது.
கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு பல துர்சம்பவங்கள் நடந்தது.
கிருஷ்ணருக்கு (God Krishna) காந்தாரியின் சாபம்
மகாபாரத போரில் அனைத்து கௌரவர்களும் கொல்லப்பட்டனர். இதனால் காந்தாரி தனது புதல்வர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கிருஷ்ணருக்கு கடுமையான சாபத்தை அளித்தார்.
கிருஷ்ணரும் அதனை மனமாற ஏற்றுக்கொண்டார்.
மகாபாரதப் போர் முடிவடைந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ராஜ்ஜியங்களும் அமைதியாகவும், வளமாகவும் இருந்தது. இருப்பினும், யாதவர்களின் இளைஞர்கள் அற்பமானவர்களாகவும், வெறித்தனமானவர்களாகவும் மாறிவிட்டனர்.
முனிவர்களின் சாபம்
கிருஷ்ணரின் (God Krishna) மகன் சம்பா பெண் போல உடையணிந்து கொண்டு துவாரகைக்கு வருகை தந்த வசிஷ்டர், துருவாசர், விசுவாமித்திரர் ஆகியோரை கிண்டல் செய்ய முயற்சி செய்தனர்.
அசட்டுத்தனமான தைரியத்தாலும், விளையாட்டுத்தனத்தாலும் சம்பா பெண் வேடமிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு என்ன குழந்தை பிறக்குமென்று அந்த மாமுனிவர்களிடம் கேட்டான்.
இவர்களின் குறும்புத்தனத்தைக் கண்டு கோபம்முற்ற முனிவர்கள் சம்பாவுக்கு ஒரு இரும்புத்தடி பிறக்கும் என்றும் அதனால் உங்கள் இனமே அழியும் என்றும் சாபமிட்டனர்.
இந்த செய்தி உக்ரசேன மன்னரை அடைந்தது. அந்த இரும்புத்தடி தூளாக்கப்பட்டு நதியில் கலக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும் யாதவ ராஜ்ஜியத்தில் இனி யாரும் போதை பொருட்களை உற்பத்தி செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
முனிவர்கள் கொடுத்த சாபத்தின் விளைவு
முனிவர்களின் சாபத்தினால் , கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் பஞ்சாஜண்யா, கிருஷ்ணரின் தேர் மற்றும் பலராமரின் கலப்பை ஆயுதம் ஆகியவவை மறைந்ததுவிடும் என்றும் ,பாவச்செயல்கள் பெருகும் என்றும் கூறினர். இன்னும் பல அபசம்பவங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டது .
இதனால் அவர்களை கிருஷ்ணர் ,பிரபாஸ் நதிக்கரையில் புனித யாத்திரை மேற்கொள்ளும்படி அனுப்பினார். இருப்பினும் அவர்கள் யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மது அருந்தினர். போதை தலைக்கேறியது.
பாண்டவர்களின் படையையும், இளம் பஞ்ச பாண்டவர்களையும் தூங்கி கொண்டிருந்த போது அசுவத்தாமன் கொன்றது குறித்து கிருதவர்மாவிடம் சம்பா விமர்சனம் செய்யத் தொடங்கினார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினர்.
கடற்கரைகளில் வளர்ந்து இருந்த கடல் செடிகளின் திடமான தண்டுகளை எடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதில் அனைவரும் இறந்தனர்.
கடலுக்குள் வீசப்பட்ட இரும்புத்தடி பொடியில் இருந்து முளைத்தது தான் அந்த கடல் செடிகள்.
அந்த அர்த்தமற்ற போரில் மது போதையில் அனைவரும் ஒருவருக்கொருவர் கொன்றனர்.கிருஷ்ணரின்(God Krishna) மகனான சம்பா மற்றும் க்ரிதவர்மா ஆகிய இருவரும் இறந்தனர்.
கிருஷ்ணர்(God Krishna), பாலராமன், தருகா மற்றும் அவரின் தேர் மட்டுமே மீதமிருந்தது.
தன் நிலை மறந்த நிலையில் யோகாவில் ஈடுபட்ட பலராமன் தன் உடலை அழித்தார்.
விஷ்ணுபகவானின் படுக்கையாக கருதப்பட்ட சேஷநாகத்தின் அவதாரமாக பலராமன் மிகப்பெரிய வெள்ளை பாம்பாக உருவெடுத்த அவன் கடலுக்குள் விழுந்தான்.
கிருஷ்ணரின் மரணம் (Death of God Krishna)
அதன்பின் கிருஷ்ணர் தாருகாவை பாண்டவர்களிடம் அனுப்பி அர்ஜுனனை உதவிக்கு அழைத்து வரக் கூறினார்.
அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாண்டவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது கிருஷ்ணரின்(God Krishna) ஆசை என்பதால், அர்ஜுனன் துவாரகைக்கு வந்thu சேர்ந்தார்.
மனம் உடைந்த கிருஷ்ணர்(God Krishna) ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தார். கிருஷ்ணர் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டிருந்தார்.அவரை கடந்து சென்ற ஒரு வேடன், அவரை மான் என தவறாக நினைத்து விட்டான்.
அந்த இரும்புத் துண்டில் இருந்து செய்யப்பட்ட அம்பை (ஜரா என்னும் வேதனை அம்பு) அந்த வேடன் கிருஷ்ணர் (God Krishna) மீது எய்தான். கிருஷ்ணரின் ஆன்மாவில் நுழைந்த அந்த அம்பு அவர் உயிரை பறித்தது. அவர் உடலை விட்டு ஆன்மாவும் பிரிந்தது.
தியானத்தில் இருந்தபோது கிருஷ்ணரின் தந்தை வாசுதேவரும் இறந்தார்.
யாதவர்களில் வயதான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே தப்பிப்பிழைத்து இருந்தனர்.அர்ஜுனனுடன் கிருஷ்ணரின் 16,000 மனைவிகள், மேலும் வயதான ஆண்கள் மற்றும் குழந்தைகளுடன் இந்திரப்பிரஸ்ததிற்கு புறப்பட்டனர்.
துவாரகை கடலில் மூழ்கியமை (God Krishna’s Duvaraka)
துவாரகையை விட்டு அவர்கள் அனைவரும் வெளியேறியவுடன் நீர் மட்டம் உயர்ந்து துவாரகை கடலில் மூழ்கியது. அதோடு ,யாதவர்கள் இந்திரபிரஸ்தத்திற்கு செல்லும் வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
அர்ஜுனர் அவர்களை பாதுகாக்க முயன்றார்.
ஆனாலும் அந்த சமயத்தில் அர்ஜுனரின் ஆயுதங்கள் செயல்படாமல் போனது. அர்ஜுனன் தோல்வி அடைந்தார்.
இதனால் அர்ஜுனனுக்கு மனதில் பல சந்தேகங்களும், குழப்பமும் ஏற்பட்டது. மனக்குழப்பத்தில் இருந்த அர்ஜுனன் உடனடியாக வேதவியாசரை சந்திக்க சென்றார்.
பாண்டவர்களின் மரணம்
வியாசர், பாண்டவர்கள் பூமியில் பிறந்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி அவர்கள் பூமியை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.
பாண்டவர்களின் மரணம் பற்றி வியாசர் கூறியதை அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சென்று கூறினார். வியாசர் கூறியதை யுதிஷ்டிரனும் ஏற்றுக்கொண்டார்.
கிருஷ்ணர் இல்லாத இந்த உலகில் தாங்கள் வாழ்வதும் வீண் என்று உணர்ந்த பாண்டவர்கள் துறவறம் சென்று அங்கு உயிரை விட்டனர்.