மருந்தாகும் கனிகள்(Medicinal fruits)
பொதுவாக பழங்கள் அதன் சுவையாலும் தித்திப்பான இனிப்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மருந்தை உண்ண யாருக்கும் பிடிக்காது என்றாலும் பழங்களை மருந்தாக (Medicinal fruits) உண்பதற்கு யாருக்கு தான் கசக்கும்?
பழங்களில் செறிவாக உள்ள உயிர்சத்துகளும், தாது உப்புக்களும் உடலுக்கு சிறந்த எதிர்ப்புசக்தியை வழங்கி நோய் வருமுன் காக்கின்றது.
சில பழங்கள் விசேடமாக குறிப்பிட்ட நோய்களை போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.அவை எவை? எந்தெந்த நோய்க்கு மருந்தாகிறது?
மாம்பழம் (Medicinal fruits)
மாம்பழத்தில் விற்றமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
கொய்யாப்பழம்(Guava)
நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. வயிற்றுபோக்கினைக் கட்டுப்படுத்தும் திறனும் கொய்யா இலைக்கு உண்டு. அதோடு நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய பலங்களில் ஒன்றாகவும் கொய்யா உள்ளது.
விற்றமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு விற்றமின்-சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப்பழத்தை (Medicinal fruits) தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.
சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக்கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்றுவிடும்.
பப்பாளி (Medicinal fruits papaya)
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடடிய பழம் இது. இதிலும் விற்றமின்-ஏ நிறைய இருக்கிறது. பல் சம்பந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும். ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பயமின்றி அதிகளவு சாப்பிடக் கூடிய பழங்களில் ஒன்றாக பப்பாளி உள்ளது.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
விளாம்பழம் 
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், விற்றமின்-ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை, கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு இல்லாத நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும் எதிர்ப்புத்தன்மை கிடைக்கும்.
அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
மாதுளம்பழம் (Medicinal fruits)
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள்,வறட்டு இருமல் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். பித்த சம்மந்தமான அனைத்து உடல் நல குறைபாட்டிற்கும் மாதுளம்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பழம் உடலில் ரத்தம் விருத்தியாக உதவும்.இரத்தசோகை உள்ளவர்களுக்கு மாதுளை நல்ல மருந்து.
வயிற்றுளைவு, வயிற்றோட்டம் ,வாந்திபேதி மாதுளம்பழத்தின் தோலை அவித்து குடிப்பதாள் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம்
தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். மலச்சிக்கல் ,மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் இக்குறைபாடுகளிருந்து விடுபடலாம்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் எடுத்து வந்தால் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை (Medicinal fruits) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சில் விற்றமின்-ஏ அதிகமாகவும், விற்றமின்-சி-யும், -பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.
பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
கறுப்பு திராட்சைப் பழம்
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக விற்றமின்-ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.
பசி ஏற்படாமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கறுப்பு திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
மாதவிலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கறுப்பு திராட்சை நல்ல மருந்து.
கறுப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது மாதவிலக்கு கால இடைவெளி சீராகும்.
அன்னாசி
அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.
அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைக்கவும்.
தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
எலுமிச்சம்பழம்
- எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும்.
- தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் நல்ல லேன் கிடைக்கும்.
- தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து தேள் கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.
தேய்த்து சிறிது நேரத்தின் பின் விஷம் இறங்கி வலியும் இல்லாமல் போய்விடும்.