இராசவள்ளிக்கிழங்கு களி (Rasavalli sweet kali)
இராசவள்ளிக்கிழங்குக்குத் தேங்காய்ப்பால் விட்டு அவித்துச் சீனி அல்லது சர்க்கரை போட்டு செய்யப்படும் களி (Rasavalli sweet kali) மிக சுவையாக இருக்கும்.
தனித்துவமான அதன் நிறமும் மணமும் பார்ப்பதற்கும் உண்பதற்கும் அருமையாக இருக்கும்.பழைய காலத்தில் இராசவள்ளிக்களி (Rasavalli sweet kali) விருந்துகளிற் கூடப் பரிமாறப்பட்டதாம்.

யாழ்ப்பாணத்து இராசவள்ளிக் கிழங்குக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் மிகுந்த செல்வாக்கு இருந்தது, இப்பவும் இருப்பதற்கு அதன் தனித்துவமான நிறமே காரணம்.
காலனித்துவ காலத்தில் மேலைப்புலத்தவர்களும் இக்கிழங்கை விரும்பியுண்டதாகக் கூறப்படுகின்றது.
யாரும் செய்யலாம். மிகவும் இலகு. நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.