முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க (Remove dead cells from face)
முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கினாலே (Remove dead cells from face) முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.சரும அழகை பேணி காப்பது என்பது இளமையை தக்க வைக்கும் செயலாகும்.
வெளியிடங்களில் சுற்றிக் திரியும் போது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது.
இதனால் முகத்தில் பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகை சீர்குலைக்கிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை (Remove dead cells from face) நீக்க வாழைப்பழம் மட்டும் போதும்.
வாழைப்பழம் எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்கும். அதோடு இது சருமத்திற்கு தேவையான அதிகம் விற்றமின்களை கொண்டுள்ளது.வாரம் இருமுறை ஒரு துண்டு வாழைப்பழம் கொண்டு இப்படி செய்தால் போதும்.
வாழைப்பழத்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை எப்படி நீக்குவது (Remove dead cells from face)
ஒரு சிறிய வாழை பழத் துண்டை மிக்ஸியில் போட்டு நீர் விடாமல் அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். முகத்தை சுத்தமாக நீரினால் கழுவிக் கொள்ளவும்.ங்கள்.
மசித்த வாழைப்பழத்தில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு, ஒரு டீஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றை கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் மாஸ்க் போல எல்லா இடங்களிலும் பூசிக் கொள்ளவும். முகம் முதல் கழுத்து வரை தடவி கொள்ளலாம்.
கழுத்திலும் இறந்த செல்கள் மூலம் பருக்கள் அல்லது மருக்களாக மாறுவதை இந்த கலவை (Face pack ) தடுக்கும்.
பதினைந்து நிமிடம் வரை நன்கு உலர விட்டு பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தமாக துடைத்து எடுத்துவிட வும்.
இது போல வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் எப்போதுமே உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக பொலிவுடன் இருக்கும்.
முதல் முறை செய்யும் அதிக மாற்றத்தைக் காணலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறச் செய்யும்.
முகம் பழைய பொலிவை மீண்டும் அடையும். வியந்து போகும் அளவிற்கு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உடற்கழிவுகள் நீங்கினாலே உடல் ஆரோக்கியம் பெறுவதோடு சரும அழகையும் பெறலாம்.
மலச்சிக்கல் நீங்க வாழைப்பழம் பெருமளவு உதவி செய்யும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு மலை வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டால் இது உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்வதோடு மலச்சிக்கல், பித்தம், உடல் சூடு போன்றவற்றை போக்குகிறது.
இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிட ,வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து உணவு பாதையை ஆரோக்கியமாக வைத்து உணவினை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது.அதோடு கழிவுகளையும் விரைவாக வெளியேற்றுகிறது.
தினமும் இந்த பழத்தை சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல் தூய்மை அடையும்.
தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்வதால் இதில் இருக்கும் பாஸ்பரஸ், நைட்ரஜன் சத்துக்கள் உடலிலுள்ள திசுக்களை மறுசீரமைப்பு செய்து இளமையாகவும், உடல் பலமாகவும் இருக்கும்படி செய்கிறது.