இன்சுலினை சுரக்க வைக்கும் உமிழ்நீர் (Saliva & insulin)
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர் (Saliva & insulin) தான். எனவே,நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். வாழ்வதற்காக உண்டனர்.
அதனால் தான் பொறுமையுடனும் அமைதியுடனும் பொறுப்புடனும் உணவருந்தினர்.அதாவது ,உணவை சரியான முறைப்படி உண்டனர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப்பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
அதேபோல் உணவு உண்பதற்கு 30 நிமிடம் முன்னதாகவும் உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும் நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.
தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது. ஆனால் இன்று நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது. வாழ்வதற்காக சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் (Saliva & insulin) இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
நாளடைவில் அது சர்க்கரைநோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.
உமிழ்நீர் பற்றி சித்தர்கள் கூறுவன என்ன?(Saliva & insulin)

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்து தான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும். நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.