சங்குப்பூவின் சிறந்த மருத்துவ பண்புகள் (Sangu poo)

சங்குப் பூ (Sangu poo) கொடி  முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.

மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. உலர்ந்த மலர்கள், புளூ டீ எனும் நீல நிற டீ தயாரிக்கவே பிரத்யேகமாக விலைக்கொடுத்து பல நாடுகளில் வாங்கப்படுகின்றன.

சங்குப் பூ(Sangu poo) கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும்.

பூ மட்டுமல்ல இதனுடைய இலை, வேர் மற்றும் விதை முதலியனவும் பயன் தருகின்றன.

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றது. தட்டையான காய்களையுடையது.

பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது.

இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. காக்கண விதைகள் நறுமணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிட தங்கம் பஸ்பமாகும்.

சங்குப்பூவின் மருத்துவப் பயன்கள்(Medicinal value of  Sangu poo)

இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும்.
சங்குப்பூச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். 
ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற உலர்ந்த மலர்களைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்தால் புளூ டீ தயார். இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
 
இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் இருக்கவும் உதவுகிறது.
 
சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். சர்பத் போன்ற பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.சங்குப்பூ,அன்னைமடி,annaimadi.com,CLITORIA TERNATEA,காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான்,sangu poo,benefits of sangu poo,சங்குப்பூவின் பயன்கள்
 
சங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
 
இரண்டு ஸ்பூன் சங்குப்பூ சாற்றுடன், சம அளவு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகள் பருக வேண்டும்.  இதனால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கலாம்.
 
தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.

சங்குப்பூ,அன்னைமடி,annaimadi.com,CLITORIA TERNATEA,காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான்,sangu poo,benefits of sangu poo,சங்குப்பூவின் பயன்கள்
சங்குப்பூ கொடிஆன்மீகரீதியாக 

மகா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமான இந்த செடியை நம் வீட்டில் நட்டு வளர்ப்பதால் அன்னை லட்சுமி தேவியின் அருட் பார்வை கிடைக்கும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் இருக்கக்கூடிய சங்குப் பூ தாவரம் நம் வீட்டில் வளர்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் உருவாக்கும்.

நீலி அபராஜிதா என அழைக்கப்படும் இந்த கொடி வளர வளர, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வளரும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சங்குப்பூ செடி வளர்த்தால் எதிர்மறை சக்தி நீங்கி நேர்மறை ஆற்றல் வீட்டில் தங்கும்.​

​புத்தி கூர்மை ஏற்படும்.

நீல சங்குப் பூ(Sangu poo) கொடியை நம் வீட்டில் வளர்ப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். இந்த பூவை மகாவிஷ்ணுவிற்குச் சமர்ப்பித்து வழிபட்டால் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் அதிகரிக்கும்.

கிருஷ்ண காண்டத்தின் அழகிய நீல மலர்களைக் கொண்ட சங்குப் பூக்களை சனி தேவருக்கு சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம், சனி பகவான் தரக்கூடிய துன்பங்கள் குறையும்.

சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாஸ்து படி, நீல சங்குப்பூ (Sangu poo) கொடியை வீட்டில் வடக்கு திசையில் நட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *