குடி பழக்கத்தை இலகுவாக நிறுத்த (Stop drinking alcohol)

குடிப்பவர்கள் தம் ஆரோக்கியத்தை கருதி உறுதியான முடிவுடன் தாங்களாகவே குடிக்கக்கூடாது (Stop drinking alcohol) என்று நினைத்தால் தான் முடியும்.
இப்போதெல்லாம் குடிப்பழக்கம் நமது நாட்டின் ஒரு கலாச்சாரமாக மாறிவருகிறது. ஆம் கல்யாணம், கெடாவெட்டு, கோவில் திருவிழாக்கள் என விசேஷங்களில் பெரும்பாலும் ஆண்கள் மது அருந்துகிறார்கள். ஏன் மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும் மது அருந்துகிறார்கள்.
இந்த குடிப்பழக்கமானது வேடிக்கை விளையாட்டாக தொடங்கி, மதுபோதை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அதற்கு அடிமையாக்குகிறது.
போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாக்கி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இத்தகைய மது பிரியர்களை திருத்துவது எப்படி என தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்கள் இந்த வழிமுறைகள் உதவலாம் .vilvai laia kashayam,குடியை நிறத்தை வில்வ பொடி,annaimadi.com,அன்னைமடி,குடியை நிறுத்த சித்த வைத்தியம்,remedies to stop drinking,மது பழக்கத்தை நிறுத்துவதற்கு என்ன செய்வது,புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்,Decoction of bay leaf,iddha medicines to stop drinking
 
குடியை நிறத்தை வில்வ பொடி
 
வில்வ இலை பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்து என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதேபோல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வில்வ இலை ஒரு அற்புத மருந்து.
இந்த வில்வ இலையை சுத்தம் செய்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை 300 மில்லி நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து இந்த பானத்தை கொடுப்பதினால் மது பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள். இதையும் மீறி மது அருந்தினால் அவர்கள் அருந்திய மது பானம் வாந்தியாக வெளியேறிவிடும். ஆகவே திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராது.

குடிப்பழக்கதை நிறுத்த வில்வஇலை கசாயம் Decoction of bay leaf

வில்வ இலை ஒரு அற்புத மருந்து. வில்வ இலை கஷாயத்தை மதுவிற்கு அடிமையானவர்கள் அருந்தினால் குடியை வெகு விரைவில் நிறுத்திவிடலாம்(Stop drinking alcohol).

தேவையானவை

வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு

ஏலக்காய் – ஒன்று

கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

பனை வெல்லம் – தேவையான அளவு

தண்ணீர் – 200 மில்லி

vilvai laia kashayam,குடியை நிறத்தை வில்வ பொடி,annaimadi.com,அன்னைமடி,குடியை நிறுத்த சித்த வைத்தியம்,remedies to stop drinking,மது பழக்கத்தை நிறுத்துவதற்கு என்ன செய்வது,புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்,Decoction of bay leaf,iddha medicines to stop drinking

கசாயம் செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் ஒரு கைப்பிடியளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.

பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் ஒன்றாக உரலில்  இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

சரி பாதி alavu யாக கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்கள் டீ, காபி குடிப்பது போல தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர குடிப்பழக்கத்தை எளிதாக நிறுத்திவிடலாம். இதனை மறைமுகமாகவும் கொடுத்து உதவலாம்.

பசுமையான வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் நிழலில் உலர்த்தி இலையை சுத்தம் செய்து பொடி செய்தும் மேற்கண்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்ந்து இந்த கசாயத்தை குடிப்பதனால் அல்லது குடிக்க கொடுப்பதினால் மது அருந்தும் பழக்கத்தை அவர்களே மறந்துவிடுவார்கள்(Stop drinking alcohol).

இதையும் மீறி மது அருந்தினால் அவர்கள் அருந்திய மதுபானம் வாந்தியாக வெளியேறிவிடும். திரும்ப மது அருந்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு அறவே வராது.

குடியை நிறுத்த சித்த வைத்தியம் (Siddha remedies to stop drinking alcohol)

முதலில் ஏலக்காய் விதை, எலுமிச்சை விதை இவை இரண்டையும் சம அளவாக எடுத்து, நன்றாக வெயிலில் காய வைத்து, அரைத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இந்தப் பொடியை நீங்கள் சமைக்கும் ஏதாவது ஒரு குழம்பு வகையில் கலந்து விட வேண்டும். குறிப்பாக காரசாரமான கறி குழம்பு, மீன் குழம்பில் கலக்கலாம்.
குடிப்பவர்களுக்கு தெரியாமலேயே இதை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட கொடுத்து விட்டால், நல்ல முன்னேற்றம் தெரியும்.
குடிக்கும் எந்த ஆல்கஹாலும் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியை உண்டாக்கும். இதனால் குடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு (Stop drinking alcohol)தாங்களாகவே  வந்துவிடுவார்கள்.
பொதுவாகவே குடிப்பவர்களுக்கு காரசாரமான கறி குழம்பு, மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.
 
நீண்ட நாட்களாக குடித்து வருபவர்களுக்கு மண்ணீரல்,கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம்பழங்களை ஊறவைத்து தினந்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் குடி பழக்கத்தை கை விடவும் முடியும். அதோடு ஆரோக்கியமும் மேம்படும்.vilvai laia kashayam,குடியை நிறத்தை வில்வ பொடி,annaimadi.com,அன்னைமடி,குடியை நிறுத்த சித்த வைத்தியம்,remedies to stop drinking,மது பழக்கத்தை நிறுத்துவதற்கு என்ன செய்வது,புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்,Decoction of bay leaf,iddha medicines to stop drinking
  • பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு குழி கரண்டி சாறு எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் இருக்கும்.
  • அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடம்பில் உள்ள ரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட நச்சுப்பொருட்கள் அதிகமாக சேர்ந்து கொண்டே வரும். ஆப்பிள் பழச்சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை நீங்கும்.
  • மதுபானத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கரட் ஜூஸ் (Carrot juice) குடிக்கலாம். அல்லது எலுமிச்சை பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை பழக்கமாக கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *