சுகருக்கான மருத்துவம் குறித்த சுவாரஸ்யம் (Interesting medical facts about sugar)
சர்க்கரைநோய் (Sugar) என்பது சில வருடங்களுக்கு முன்பு வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய நோயாக இருந்தது. ஆனால் இப்பொழுது வயது வேறுபாடின்றி சிறிய குழந்தைகள் முதல் அனைவருக்கும் வருவது சாதாரணமாகி விட்டது. மருந்து மாத்திரைகளை ஒழுங்காக பாவித்தும் ஏன் குறைவதற்கு பதிலாக கூடிக் கொண்டே இருக்கிறது?
காரணம் என்ன? சுகர் (Sugar) குறைய என்ன செய்யலாம்?
சுகர்னு (Sugar) மருத்துவரிடம் போனால்அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.ஒரு வருஷம் கழித்து சுகர் அதிகமானால்2 mg tablet கொடுக்கிறார்.மறுபடியும் சுகர் அதிகமானால் ரெண்டு combination tablet கொடுக்கிறார்.மறுபடியும் சுகர் அதிகமானால் இன்சுலின் போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட BP வந்தால் அதற்கு மாத்திரை போட சொல்றார்.அப்புறம் கொலஸ்ட்ரால் வந்து விடும் என்று அதற்கு தனி மாத்திரை. அப்புறம் காலில் புண் வந்து கடைசியில் காலை வெட்டி எடுக்கும் நிலைமை.
சொன்ன Diet சரியாக கடைபிடிக்கவில்லை என்பது மருத்துவரின் வாதம்.
எந்த இடத்துலயும் நோயாளி DOCTERரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.அவ்வளவு நம்பிக்கை.
1.தான் சாப்பிடற மருந்துகளிலும் சந்தேகம் வரவில்லை.
2.மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதே ஏன் என்று யோசிப்பதில்லை.
3.ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சே என்று சிந்திக்கவில்லை.
4.வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிப்பதும் இல்லை. அந்த மாத்திரையோட பக்கவிளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
Sugar குணமாக்க மாற்றுவைத்தியத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினால் நம்புவதும் இல்லை.கடைசி வரைக்கும்அக்கு பங்ஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா ஹோமியோபதி இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிவிட்டு அவதிபடுவார்.
எங்கே நல்லது இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இருத்தல் நலம்.மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்போம்! தெளிவு பெறுவோம்!செயற்படுவோம்!!
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
உணவே மருந்து.மருந்தே உணவு. இயற்கை மருந்துகளை உண்போம்.
இரசாயனம் கலந்த மருந்துகளை கூடுமானவரை தவிர்ப்போம்.
நாவல், ஆவாரம்பூ,முருங்கை,வெந்தயக்கீரை, சுண்டைக்காய் வெந்தயம்,வெண்டைக்காய்,கொய்யா,கொத்தமல்லி,கரிசலாங்கண்ணி,
பாகல்,குறிஞ்சா, நெல்லிக்காய் போன்ற காய்கனிகள், இலைவகைகளை,மூலிகைகளை அடிக்கடி உணவில் பயன்படுத்தி கொள்வோம்.
இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.