குழந்தையை அன்பாக நல்வழிப்படுத்துவது எப்படி ?(To discipline a child)
அன்பாக சிரித்து மகிழும் குழந்தைகளை அடிப்பது தீர்வல்ல… அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது என்பது எளிதானதே (To discipline a child).
அதற்கு முக்கியமாக பெற்றோர் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மிக அவசியம்.
”குறும்புகளும், தவறுகளும் செய்வது குழந்தைகளின் இயல்பு. அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதும், கடுமையான வார்த்தைகளால திட்டுவதும் தீர்வாகாது.
பதிலாக, குழந்தைகளின் சிறிய அறிவுக்கு புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
செய்த தப்பு என்ன, அதன் பாதிப்புகள் எவை என்பதை குழந்தைக்கு புவிளங்க வைக்காமல் குழந்தைளை அடிப்பது, அவர்களின் நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் தராது.
”குழந்தைகள் தப்பு செய்யும் போது பெற்றோர்கள் அடிப்பதால், செய்த தவறை உணர மாட்டார்கள். தன் அப்பா, அம்மா தன்னை அடித்து விட்டாங்களே என்பது தான் அவர்களுக்கு நினைவில் நிற்கும்.
தற்போது பெற்றோர் இருவருமே வேலைக்குப் போறாங்க. வேலை சூழலில் நிறைய டென்ஷன். அது வீடு வரைக்கும் தொடரும். அந்த நேரத்தில் குழந்தைங்கள் இயல்பாக செய்யும் சின்ன தப்பும், கோபத்தில் இருக்கும் பெற்றோருக்கு குற்றமாக தெரியும்.
இதனால் சில பெற்றோர் குழந்தைகள் மேல் கோபத்தைக் காட்டும் போது, குழந்தைகளுக் பெற்றோரின் மீது பயம் வரும்.
இந்தப் புள்ளியில் இருந்து தான் அவர்கள் பெற்றோரை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.
பொதுவாக இப்போதெல்லாம் பெற்றோர்கள், குழந்தைங்க கூட அதிக நேரம் செலவிடுவது இல்லை. அது தான் தற்போது குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுக்குக் காரணம்.
குழந்தைகளுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது. அவர் வயசுக்கு தகுந்தபடி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து தான் புரியவைக்கணும்.
அதோடு பொறுமையாக அன்பாக சொல்லி கொடுப்பதற்கு வீடுகளில் தாத்தா பாட்டி என அனுபவம் வாய்ந்தவர்கள் கூட இருக்கும் வாழ்வியலும் தற்போது இல்லை.
குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும். அதேசமயம் குழந்தைங்களை முடிஞ்ச வரைக்கும் அடிக்கவும், திட்டவும் கூடாது. எப்படி?(To discipline a child)
குழந்தைகள் ஏதாவது தப்பு செய்யும் போது , அதை அவங்களுக்குப் புரிய வைத்து , அதிக பாதிப்பு இல்லாமல் சின்ன தண்டனை கொடுக்கலாம்.
உதாரணமாக, ஒரு பாடலை ,திருக்குறளை மனப்பாடம் செய்து சொல்ல வைக்கலாம்.
அல்லது ஒரு வட்டம் போட்டு, அதற்குள் குறிப்பிட்ட நிமிஷம் வரை நிற்க வைக்கலாம்.
பொதுவாக எந்த ஒரு குழந்தையும் தனிமையில்ல இருக்கவும், ஒரே இடத்தில் நகராமல் இருக்கவும் விரும்பாது. கூப்பிட்டு கண்டிப்பதும், தவறை விளக்குவதும் நல்ல பலன் கொடுக்கும்.
ஒருவேளை தான் தண்டனை பெற்ற தப்பை மறுபடியும் செய்யும் சூழல் ஏற்படும் போது, ஞாபகம் வந்து, அதைச் செய்ய மாட்டார்கள்.
குழந்தை சேட்டை செய்சாலும், நாலு பேர் மத்தியில் அதைச் சுட்டிக்காட்டி திட்டுறதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் தூங்க வைக்கும் போது குழந்தைங்க அன்றைக்கு என்னவெல்லாம் நல்லது செஞ்சாங்க, கெட்டது செஞ்சாங்கன்னு கதைகள் மூலமா, குழந்தைங்களை அதில் மறைமுக கதாபாத்திரங்களாக்கிச் சொல்லலாம்.
குழந்தைங்களுக்கு கதை ரொம்பப் பிடிக்கும். அது மூலமா நல்லது, கெட்டது சொல்றப்போ நிச்சயமா புரிஞ்சுக்குவாங்க.
ஒரு குழந்தை ஏதோ ஒரு தப்பை தொடர்ச்சியா செய்தா, அதோட விளைவை அது இன்னும் உணரலைன்னு அர்த்தம். அதனால அந்த தப்போட தீவிரத்தை அதுக்குப் புரியும்படியா எடுத்துச்சொல்லி, ‘இப்போ நீ குட் பாயா இருக்க.
இந்த தப்பும் செய்யாம இருந்தா உன்னை எல்லோரும் வெரி குட் பாய்ன்னு சொல்லி பாராட்டுவாங்க’ன்னு சொல்லி குழந்தையை மெல்ல மெல்ல நேர்வழிப்படுத்தலாம்.
‘இன்னைக்கு ஒரு சேட்டை கூட செய்யல… பெஸ்ட் கிட்’னு சொல்லி, தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் குழந்தையின் கையில் ஸ்கெட்ச் கொண்டு ஸ்டார் போடலாம்.
மர்த்தாக இருந்த நாளில், ‘இன்னைக்கு உனக்கு அஞ்சு ஸ்டார்ஸ்’ என்றும், ‘இன்னைக்கு நீ ரெண்டு தப்பு செஞ்சேயில்ல…
அதனால மூணு ஸ்டார்ஸ். நாளைக்கு சமர்த்தா இருந்து அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கணும் சரியா’ என்றும் ஆர்வத்தைத் தூண்டலாம். தன் கையில இருக்கும் ஸ்டாரை நண்பர்கள், உறவினர்களிடம் குழந்தை காட்டி பெருமைப்படும்.
தொடர்ந்து, ‘நீ வாரம் முழுக்க, மாசம் முழுக்க அஞ்சு ஸ்டார்ஸ் வாங்கினா, உன்னை அவுட்டிங் கூட்டிட்டுப் போவேன்’னு சொல்லி, அதன்படி நடந்துகொள்ளலாம்.
இதெல்லாம் அன்பின் பாதையில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிகள்.
மாறாக, குழந்தை செய்யும் தவறை கண்டிச்சு, கண்டபடி அடிச்சு, திட்டும்போது குழந்தை மனசில் இறுக்கம்தான் அதிகமாகும். மேலும், பெற்றோரின் அந்த கோபத்தையும் அது கத்துக்கும்.
அதனால பள்ளியில் சக நண்பர்களுடன் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால் , தனக்குப் பிடிக்காத ஒன்றை நண்பர் செய்தால், தன் பெற்றோரின் நடவடிக்கை போலவே தானும் நண்பரை அடித்தோ, கடுமையான வார்த்தைகளால் பேசவோ தான் அந்தக் குழந்தை முயலும்.
அதனாலே, குழந்தைகளின் வழியிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்துவது தான் சரியான குழந்தை வளர்ப்பு முறை!”