இளமை நீடிக்க செய்யும் நெல்லிக்காய் (To prolong youth)

நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க (To prolong youth) செய்கிறது.

இதில் நிறைந்திருக்கும் விற்றமின் சி (Vitamin C) சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது.

குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான விற்றமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் விற்றமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.

இந்த விற்றமின் ஏ கண்களில் விழி படலங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலங்களில் கண்புரை, கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கிறது.

இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதாவதால் (To prolong youth) ஏற்படும் கண்பார்வை குறைபாடுகள் போன்றவையும் நீங்கும். கண்பார்வை தெளிவும் ஏற்படுகிறது.

நெல்லிக்காயை எப்பிடி உணவில் சேர்க்கலாம்

நெல்லிக்காய் சாதம், நெல்லிக்காய் மிட்டாய், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் ஜூஸ், போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

ஆனால் நெல்லிக்காய்  அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

annaimadi.com,Gooseberry to prolong youth,to prolong youth,how to prolong youth,how to prolong youth skin,how to stay young for longer,how to prolong aging,benefits of amla,nellikkaayin payankal,ilamaiyai thakka vaikkum nelli,nelli juice

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்

இந்த நெல்லிக்காயில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. அதாவது புரதச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், கொழுப்பு, நியாசின், வைட்டமின் பி1, வைட்டமின் சி, தாதுப்பொருட்கள் மற்றும் 60 வகையான கலோரிகள் என எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.
மற்ற எந்தவொரு காய்களிலும், இல்லாத அளவிற்கு ஒரு நெல்லிக்காயில் அதிகப்படியான விற்றமின் சி உள்ளது. நமது நாட்டில் தொன்றுத்தொட்டு இருக்கக்கூடியசித்தமற்றும்ஆயுர்வேத மருத்துவங்களிலும், இந்த நெல்லிக்கனியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

நெல்லிக்கனியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பல ரசாயனங்களும், வேதிப்பொருட்களும் உள்ளன.

இந்த நெல்லிக்காய்களை தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை என்று சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு  நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும், மூன்று ஆப்பிள் சாப்பிட்டதற்கு சமம்.
 
 இந்த நெல்லிக்கனியில் உப்பு சுவையை தவிர்த்து, மற்ற அனைத்து சுவைகளையும் தன்னகத்தில் கொண்டுள்ளது. 

இளமை நீடிக்க (To prolong youth)

நெல்லிக்காய் ஒரு சிறந்த காயகற்ப மூலிகை ஆகும். இந்த நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு மூப்பு என்பது இல்லாமல் போய்விடும். அதாவது
வயதானாலும், அவர்கள் வயதான தோற்றத்தை அடைய மாட்டார்கள்.
நமது தமிழ் இலக்கியங்களில் இந்த நெல்லிக்கனி  இடம்பெற்றிப்பது நாம் அறிந்ததே. நமது நாட்டில்ஒளவையர் பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு சிறப்பு மிக்க ஒளவையருக்கு,
நீண்ட ஆயுட்காலத்தை தரக்கூடிய நெல்லிக்கனியை (To prolong youth) கடையெழுவள்ளல்களில் ஒருவரான அதியமான் கொடுத்தது
என்பது  பற்றி புராணக் கதைகள் மூலம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.

இந்த நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நமது செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு,இரத்த ஓட்டம் அதிகரித்து தோலானது சுருங்குவதை தடுக்கிறது. 

அதுமட்டுமல்லாமல் நமது சருமத்தை பொலிவுடன் இருக்கச்செய்கிறது மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் இடமிருந்தும் நம்மை காத்து, நமதுஇளமை பருவத்தை நீடிக்க செய்கிறது.

எலும்புகள் வலுப்பெற  (To prolong youth)

நமது உடல் வலிமையுடன் காட்சியளிக்க காரணமாவது நம்முடைய எலும்புகள் தான். இந்த நெல்லிக்காயில் உள்ள அதிகப்படியான கல்சியம், நமது எலும்புகளை பலமடைய செய்கிறது. இதனால் முதுமையிலும்ஆரோக்கியமாக நம்மால் இருக்கமுடியும்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *