உச்சி பிள்ளையார் வரலாறு (Uchi-pillaiyar-kovil)

திருச்சிக்கு அடையாளமாகவும், திருச்சியை நினைத்தாலே நினைவுக்கு வருவதும் உச்சிப் பிள்ளையார் தான்(uchi-pillaiyar). திருச்சியின் மணிமகுடம் மலைக்கோட்டை என்றால் மணிமகுடத்தின் வைரமாக ஜொலிப்பவர் உச்சிப் பிள்ளையார்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சியான திருச்சி மாநகரம் கோயில்களுக்குக் குறைவில்லாத புண்ணிய பதி எனப்படுகிறது.
உச்சிப்பிள்ளையார் கோவில் (Uchi-pillaiyar-kovil) மலையானது மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார்.
மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக(Uchi-pillaiyar) காட்சியளிக்கின்றார்.
 
இதைத்தவிர பல்லவர் காலத்து குடைவரை கோயில்கள் பல ஆயிரம் நூற்றாண்டுகள் கழித்தும் இன்றும் அழியாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மலையானது சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் தென் கைலாயம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
 
திருச்சிராப்பள்ளி மூன்று தலைகளை கொண்ட திரிசிரன் என்ற அசுர அரசன் இந்தப் பகுதியை ஆண்ட போது திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்டு பின்பு சிராப்பள்ளி என்று மாறி தற்சமயம் திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ராவணனின் சகோதரனான மூன்று தலை கொண்ட திரிசிரன், இங்குள்ள ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர் கொண்டதாம்.

திரிசிரன் தங்கிய இடம் என்பதால் சிராப்பள்ளி என்றானதாக புராணம் கூறுகிறது.சமணர்களின் வாழ்விடமாக திருச்சி மலையின் குகைகளும் படுகைகளும் இருந்ததாலும், சமணர்களின் தலைவரான சிரா என்பவர் இங்கு வசித்ததாலும் இது சிராப்பள்ளி என்றானது என்று வரலாறு கூறுகின்றது.

சீராப்பள்ளி என்றால் பெருமை கொண்டவர்களின் தங்குமிடம் என்பதால் அது மருவி சிராப்பள்ளி என்றானதாகவும் ஒரு கருத்து உண்டு.

 உச்சிக்குப் பிள்ளையார் வந்த கதை(Story of Uchi-pillaiyar)

ராமர் பட்டாபிஷேகத்தில் கலந்துகொண்ட விபீஷணர், தன் தேசமான இலங்கைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ராமரின் பட்டாபிஷேகத்தில் விபீஷ்ணர் கலந்து கொண்டதற்காக நன்றி கூறி, ரங்கநாதரின் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.
அதனை தன் கையில் எடுத்துக்கொண்டு தெற்கு பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த விபீஷணனுக்கு களைப்பு ஏற்பட்டது.
trichy-uchi-pillaiyar-kovil,uchi-pillaiyar-kovil,உச்சி பிள்ளையார் கோவில்,annaiamdi.com,malaikkoddai,திருச்சி மலைக்கோட்டை, அன்னைமடி
அந்த சமயம் காவிரி கரையோரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினார் விபீஷணர்.தன் கையிலுள்ள சிலையை, அவர் பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஒரு சிறு பாலகனிடம், சற்று நேரம் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு தன் கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
ஆனால் அந்த சிறுவனோ, சிலையை தரையில் வைத்துவிட்டு அருகில் உள்ள மலையின் மீது சென்று அமர்ந்து கொண்டான்.
களைப்பாறி விட்டு கண்களைத் திறந்து பார்த்த விபீஷணனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. – அந்த சிறுவனை தேடிப்பார்த்தால் காணவில்லை. தரையில் இருந்த ரங்கநாதரின் சிலையை எடுக்க முயன்றபோது அது நகரவில்லை.
அந்த விநாயகர் தான் சிறு பாலகனின் ரூபத்தில் வந்து, அந்த சிலையானது இலங்கைக்கு செல்லாமல் தடுத்து இருக்கின்றார்.
தற்போது அந்த சிலை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளாக காட்சியளிக்கின்றது. மலையின் உச்சியில் அமர்ந்திருந்த விநாயகரை கண்டுபிடித்த விபீஷணர், விநாயகரின் தலையில் ஒரு கொட்டு வைத்ததாக வரலாறு கூறுகிறது.

ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஸ்ரீராமரால் அளிக்கப்பட்ட திருமாலின் சயனகோல ரங்கநாதரின் விக்கிரகத்தை இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார்.

செல்லும் வழியில் திருவரங்கத்தில் காவிரிக் கரையில் நீராட விரும்பிய விபீஷணன், அங்கிருந்த சிறுவன் ஒருவனிடம் கொடுத்து, இதை கீழே வைத்து விடாதே.

வைத்தால் எடுக்க முடியாது என்று எச்சரித்து சென்றான். திருமாலின் விருப்பம் அங்கேயே பள்ளி கொள்ள வேண்டும் என்பது. அதன்படி சிறுவன் அந்த விக்கிரகத்தைக் கீழே வைத்து விட்டான்.

ரங்கநாதருக்கு அங்கேயே தங்கிவிட்டார். இது கண்டு கோபமுற்ற விபீஷணன், அந்த சிறுவனைத் துரத்திக் கொண்டு மலை உச்சிக்கு வந்து தலையில் ஓங்கிக் குட்டினான்.

அண்டமே நடுங்க ஒலித்த அந்த குட்டால் சிறுவனின் தலையில் காயம் உண்டானது. சிறுவனே பிரணவப் பொருளான கணநாதராய், முழுமுதற் பொருளாகத் தோன்றி விபீஷணனுக்கு அருளினார்.

அவரே அங்கு காலமெல்லாம் எழுந்தருளி அருள்பாலிப்பதாகவும் வாக்கு அளித்தார். இப்படித்தான் உச்சிக்குப் பிள்ளையார் வந்த கதை எனப்படுகிறது. இன்றும் இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைப் பார்க்கலாம்.

தாயுமானசுவாமி உருவான கதை

இப்பகுதியில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வரும் நேரம் அது. முன்னதாகவே தன் தாய்க்கு செய்தி அனுப்பிவிட்டு, தாயின் வருகைக்காக காத்திருந்தாள். அவளின் தாய்வீடு காவிரி கரைக்கு அந்தப்பக்கம் உள்ளது.
அந்நேரத்தில் காவிரிக்கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று புரியாத அந்த கர்ப்பவதி அந்த ஈசனை நினைத்து பிரார்த்தனை செய்தாள்.
அந்த சமயத்தில் தாய் வேடத்தில் வந்த அந்த ஈசன் தான், கர்ப்பிணிக்கு சுகப்பிரசவமாக உதவி செய்து, நலமாக பிள்ளையை பெற்றெடுக்க அருள்பாவித்தார்.
 
சிறிது நேரம் கழித்து கர்ப்பவதியின் நிஜமான தாய் வந்த பின்பு தான் அந்த ஈசனே வந்து உதவியது அவர்களுக்கு புரிந்தது. அந்த இடத்தில் மட்டுவார்குழலியுடன் ஈசன் அனைவருக்கும் காட்சி தந்தார்.
இதன் மூலமாகத்தான் தாயுமான சுவாமிகள் என்ற பெயரினை அவர் பெற்றார்.
இந்தக் காலத்திலும் தாயுமான சுவாமியை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
 
trichy-uchi-pillaiyar-kovil,uchi-pillaiyar-kovil,உச்சி பிள்ளையார் கோவில்,annaiamdi.com,malaikkoddai,திருச்சி மலைக்கோட்டை, அன்னைமடி

10-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசரான நாராயண வேம்பையர் கோன் காலத்து கல்வெட்டு ‘சிராமலை’ என்றும், ஸ்ரீராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமான சுவாமியும் இவ்வூரை ‘சிரகிரி’ அதாவது தலையான மலை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சியின் கம்பீர அடையாளமான மலையைப் பற்றி அநேக அருளாளர்கள் பாடிப் பரவியுள்ளனர்.

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர், தாயுமான அடிகள், சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர் கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் இந்நகரின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்து பலவாறு பாடி உள்ளார்கள்.

திருச்சி மலை 273 அடி உயரம் கொண்டது. இந்த மலைப் பாறைகள் சுமார் 230 கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது என்கிறது வரலாறு.

இமயமலையின் காலமே 4 கோடி ஆண்டுகள் தான் என்கின்றன ஆய்வுகள்.

ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலம் தொடங்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் வரை பல்வேறு அரசுகளையும் போர்களையும் சந்தித்த சாதனை கொண்டது இந்த மலையும் அதில் உள்ள கோட்டையும்.

நீண்டு வரும் வரலாறுகளை விலக்கிவிட்டு ஆன்மிகத்தில் நுழைந்தாலும் மலைக்கோட்டை மூன்று பெருமைமிகு வழிபாட்டு கோயில்களைக் கொண்டு சிறப்புற்று விளங்கி வருகிறது.

மலைக்கோட்டை மூன்று பெருமைமிகு ஆலயங்கள்

 பரந்தாமன் பள்ளி கொள்ளும் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்ற சர்ச்சை எழ, மேரு மலை தூக்கி வீசப்பட்டதாம்.

அதில் விழுந்த ஒரு துண்டே சிராப்பள்ளி மலை என்றும், மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

மலையின் தொடக்கத்தில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், மலையின் மேலே ஓம்கார வடிவம் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் இடையே அமைந்துள்ள தாயுமானவர் கோயில் ஆகியவை எழுந்தருளி உள்ளன.

இதைத் தவிர மலையின் இடையே பல்லவர் கால குடைவரை கோயிலும், பாண்டியர் கால குடைவரை கோயிலும் உள்ளன. திருச்சி மலையும் பக்தர்களால் ‘தட்சிண கயிலாயம்’ என்று போற்றப்படுகிறது.

இந்த மாபெரும் மாணிக்க மலையின் உச்சியில் மங்கலநாதராக ஜொலிப்பவர் உச்சிப் பிள்ளையார் (Uchi-pillaiyar) .

மலை அடிவாரத்தில் எழுந்தருளி உள்ள மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு சுமார் 417 படிகள் மலை மீது ஏறி உச்சிக்கு சென்றால் ஓம்கார ரூபமாக அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

வழியெங்கும் வரலாற்றுச் சுவடுகளும் நினைவு மண்டபங்களும் கொண்டுள்ளன இம்மலை.

பல்லவர்கள் ஆட்சியில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த உச்சிப் பிள்ளையார் கோயில், பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டு விரிவானது.

இந்த கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும் என்பது வியப்பான உண்மை.

உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து திருச்சி நகரையும், திருவரங்கத்தையும், காவேரி ஆற்றையும், கொள்ளிடத்தையும் காண்பது என்பது அலாதியான ஆனந்ததைத் தரும் என்பார்கள் திருச்சிவாசிகள்.

செலவில்லாத ஒரு சுற்றுலாத் தலமாகவும் உச்சிப் பிள்ளையார் (Uchi-pillaiyar) கோயில் விளங்கி வருகிறது என்பார்கள் திருச்சியின் குடும்பத் தலைவர்கள்.

சதுர்த்தி நாள்கள், விநாயகர் சதுர்த்தி, ஆங்கில – தமிழ் புத்தாண்டுகள் இந்த கோயிலில் விசேஷமான நாள்கள் எனலாம்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கோயிலின் திருநடை திறந்திருக்கும். திருச்சி மாநகரின் மையத்தில் பிரமாண்டமாக, எங்கிருந்து நோக்கினாலும் காணும் வகையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *