வெந்தயக்கீரையில் குழம்பு (Venthaya keerai kulampu)

வெந்தயக்கீரை ,சூட்டு உடம்பு உள்ளவர்களுக்கு மிக சிறந்தது ஆகும்.  அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு உடற் சூடு கூடி ஏற்படும் கண் நோய்களுக்கும் வெந்தயக்கீரை (Venthaya keerai kulampu) குளிர்ச்சியூட்டக் கூடியது.

சாதம், புட்டு, இடியப்பத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும். சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!

சுவையான, சத்தான ஆரோக்கியம் தரும் குழம்பு!

வெந்தயக்கீரை குழம்பு செய்யும் முறை (Venthaya keerai kulampu)

வெந்தய கீரையை வாரம் ஒரு முறை வெந்தயக்கீரை வறை, குழம்பு, அல்லது  வெந்தய கீரைக்கூட்டு போன்றவையாக உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும்.

வயிற்றுப் போக்கை நிறுத்தும். இந்தக்கீரையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால், மாதவிடாய் தொல்லைகளை நீக்கவும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யுவும் , உடலை வளர்க்கவும் உதவுகின்றது.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். அதாவது , வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும். சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகை கீரை இது.Venthaya keerai kulampu,Venthaya keerai kulampu recipe,Venthaya keerai kulampu recipe in tamil,annaimadi.com,kulampu recipe,Venthaya keerai benefits,for cure body heat,for healthy eyes,vendhaya keerai kuzhampu,Methi leaves kulampu,methi lecáves

மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை நீக்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது. மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.

Venthaya keerai kulampu,Venthaya keerai kulampu recipe,Venthaya keerai kulampu recipe in tamil,annaimadi.com,kulampu recipe,Venthaya keerai benefits,for cure body heat,for healthy eyes,vendhaya keerai kuzhampu,Methi leaves kulampu,methi lecáves
 
வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் (to cure Ulcer) குணமாகின்றன.
மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. 
 
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உடற்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 
Venthaya keerai kulampu,Venthaya keerai kulampu recipe,Venthaya keerai kulampu recipe in tamil,annaimadi.com,kulampu recipe,Venthaya keerai benefits,for cure body heat,for healthy eyes,vendhaya keerai kuzhampu,Methi leaves kulampu,methi lecáves
வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண்,  வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
நீரிழிவுநோய் உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத்  தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வெந்தயக் கீரை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. 
 
வெந்தயக்கீரை குழம்பும் வெந்தய குழம்பு போல்  நல் மணம் சுவை கொண்டிருக்கும். கசப்பு தன்மை இருக்கும் என நினைக்க வேண்டாம்.சாதாரணமாக மற்ற கீரைகள் போல் தான் இருக்கும்.
 
வெந்தயகீரைக்காக  கடைகளில் அலைய வேண்டிய அவசியம் இல்லை. வெந்தயத்தை மண் தொட்டியில் போட்டு சிறிது நீர் விட்டு வையுங்கள்.இடையிடையே சிறிது நீர் விடுங்கள். 2 வாரத்திற்குள், உங்களுக்கு புதிய வெந்தகீரை கிடைத்து விடும்.
வெந்தயத்தை 2 நாட்கள் நீரில் ஊறவைத்துபோட்டால், இன்னும் விரைவாக வளர்ந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *